இளவரசனுக்கு அஞ்சலி.. திருமாவளவனுக்கு தர்மபுரி கலெக்டர் அனுமதி மறுப்பு!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: மர்மமான முறையில் இறந்த இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார்.
இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு சென்று இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார்.

திருமாவளவனின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு அனுமதி கொடுப்பது குறித்த இறுதி முடிவை மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் இளவரசனின் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications