காமராஜர் பிறந்த நாள்...ஒன்று கூடி கொண்டாடிய காங். தலைகள்
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அத்தனை கோஷ்டிகளின் தலைவர்களும் ஒற்றுமையாக கூடி, சண்டை சச்சரவின்றி படத்திற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் திருநாவுக்கரசர், செல்லக்குமார், முன்னாள் மத்தியஅமைச்சர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உட்பட எராளமான காங்கிரஸ் கட்சியினர் பெருந்தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
கோஷ்டித் தலைவர்கள் ஒற்றுமையாக கூடி காமராஜர் பிறந்த நாளை கொண்டாடியது காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் ப.சிதம்பரம் கோஷ்டியைத்தான் இதில் காண முடியவில்லை.
அதானே...!