பத்துப் பத்துப் பேராக இந்தியாவுக்குள் ஊடுறுவ 300 தீவிரவாதிகள் காத்திருக்கிறார்களாம்!
டெல்லி: பத்துப் பத்து பேராக இந்தியாவுக்குள் ஊடுறுவி நாச வேலைகளில் ஈடுபட 300 தீவிரவாதிகள் எல்லைக்கு அப்பால் காத்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான எச்சரிக்கைத த்கவலை உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்திய நிலைகளில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி நாட்டுக்குள் ஊடுறுவி நாச வேலைகளில் ஈடுபடுவதே இவர்களின் திட்டம் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்
இதுகுறித்து 19வது கார்ப்ஸ் படைப் பிரிவின் கமாண்டிங் அதிகாரியான டி.எஸ்.ஹூடா கூறுகையில்,250 முதல் 300 தீவிரவாதிகள் வரை எல்லைக்கு அப்பால் ஊடுறுவக் காத்துள்ளனர்.

10 -10 பேராக வரத் திட்டம்
இவர்கள் பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்களாக உள்ளே ஊடுறுவ தயாராகி வருகின்றனர். நிலைகளில் உள்ள படையினரைத் தாக்கி இவர்கள் ஊடுறுவத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

தாக்குதல் அதிகரிப்பு
எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுறுவலுக்காக நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் ஊடுறுவல் முயற்சிகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. இருப்பினும் ராணுவம் உஷார்நிலையில் உள்ளதால் இந்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போய்க் கொண்டிருக்கின்றன.

ஜம்முவில் பிரச்சினை இல்லை
ஜம்மு பிராந்தியத்தில் இதுவரை தீவிரவாதிகளின் ஊடுறுவல் முறியடிக்கப்பட்டு வருகிறது. அங்கு பிரச்சினை இல்லை.

பூன்ச் பகுதியில்தான் சிக்கல்
அதேசமயம், பூன்ச் பகுதி வழியாக ஊடுறுவும் முயற்சிகளில் தொடர்ந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே இப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications