அதிக வட்டி தருவதாக கூறி 115 சவரன் நகைகளை மக்களிடமிருந்து வாங்கி ஏமாற்றிய வி.ஏ.ஓ. அருள்தேவி
காஞ்சிபுரம்: வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். பணம் தேவைப்படுகிறது. பணமோ நகையோ தாருங்கள். அதை அதிக வட்டியுடன் திருப்பித் தருகிறேன் என்று கூறி கிராம மக்களிடமிருந்து 115 பவுன் நகைகள் மற்றும் பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் கிராம நிர்வாக அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுர் அருகே உள்ள கோட்டூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் அருள்தேவி. கணவர் இல்லை. இவர் கோட்டூர் மக்களிடம் தான் வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும், பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் நகையோ அல்லது பணமோ கொடுத்தால் அதை அதிக வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.
அருள்தேவியே கேட்கிறாரே என்று கிராம மக்கள் பலரும் நகை, பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால் வட்டியும் தரவில்லை. வாங்கிய பணம், நகையையும் திருப்பித் தரவில்லை அருள்தேவி.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தனர் மக்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருள்தேவியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 115 பவுன் நகைகளையும், பணத்தையும் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.
தற்போது அருள்தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications