பொற்கோவில் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி மீதான தாக்குதல்.. லண்டனில் விசராணை தொடங்கியது
லண்டன்: அமிர்தசரஸ் பொற்கோவிலில் மறைந்த இந்திரா காந்தி காலத்தில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் லண்டன் கோர்ட்டில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில் இரண்டு சீக்கிய ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
9 மாதங்களுக்கு முன்பு பிரார் மீது லண்டனில் தாக்குதல் நடந்தது. அவர் கத்தியால் குத்தப்பட்டார். பிரார், ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி ஆவார்.
இந்த தாக்குதல் தொடர்பாக 34 வயதான மந்தீப் சிங் சந்து, 36 வயதான தில்பக் சிங் மற்றும் 38 வயதுப் பெண் ஹர்ஜித் கெளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது லண்டன் செளத்வாக் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை நான்கு வாரத்திற்கு நீடிக்கும்.
இந்த வழக்கில் 33 வயதான பர்ஜிந்தர் சிங் சங்கா என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தனது மனைவி மீனாவுடன் லண்டனுக்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்த நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கப்பட்டார் பிரார் என்பது நினைவிருக்கலாம்.
78 வயதான பிராருக்கு தீவிர கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது. அவரது மீனா அதிர்ஷ்டவசமாக தாக்குதலிலிருந்து தப்பினார். தற்போது நாடு திரும்பி விட்ட பிரார், இந்தியாவிலிருந்தபடி கோர்ட் விசாரணையின்போது தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications