பொற்கோவில் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி மீதான தாக்குதல்.. லண்டனில் விசராணை தொடங்கியது
லண்டன்: அமிர்தசரஸ் பொற்கோவிலில் மறைந்த இந்திரா காந்தி காலத்தில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் லண்டன் கோர்ட்டில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில் இரண்டு சீக்கிய ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
9 மாதங்களுக்கு முன்பு பிரார் மீது லண்டனில் தாக்குதல் நடந்தது. அவர் கத்தியால் குத்தப்பட்டார். பிரார், ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி ஆவார்.
இந்த தாக்குதல் தொடர்பாக 34 வயதான மந்தீப் சிங் சந்து, 36 வயதான தில்பக் சிங் மற்றும் 38 வயதுப் பெண் ஹர்ஜித் கெளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது லண்டன் செளத்வாக் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை நான்கு வாரத்திற்கு நீடிக்கும்.
இந்த வழக்கில் 33 வயதான பர்ஜிந்தர் சிங் சங்கா என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தனது மனைவி மீனாவுடன் லண்டனுக்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்த நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கப்பட்டார் பிரார் என்பது நினைவிருக்கலாம்.
78 வயதான பிராருக்கு தீவிர கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது. அவரது மீனா அதிர்ஷ்டவசமாக தாக்குதலிலிருந்து தப்பினார். தற்போது நாடு திரும்பி விட்ட பிரார், இந்தியாவிலிருந்தபடி கோர்ட் விசாரணையின்போது தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications