நெல்லையில் தாய், மகள் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தாய் மற்றும் மகள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தர். அவரது தந்தை குமாரவேலு. குமாரவேலுவுக்கு சிதம்பரம் என்ற பெண் 2வது திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சுந்தர் ஆத்திரம் அடைந்தார். தனது தந்தைக்கு 2வது திருமணம் செய்து வைத்த சிதம்பரம் மீது அவர் ஆசிட் ஊற்றினார்.
அப்போது தனது தாயை காப்பாற்ற வந்த சிதம்பரத்தின் மகள் சீதா மீதும் ஆசிட் பட்டது. இதில் தாய், மகள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications