புதுவையில் இன்று முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்: காய்கறி விலை உயரும் அபாயம்

புதுவை மேட்டுப்பாளையத்தில் கடந்த 2007ம் ஆண்டு போக்குவரத்து நகர் அமைக்கப்பட்டது. அங்கு லாரிகளை நிறுத்த போதிய வசதி இல்லை. இதையடுத்து போக்குவரத்து நகரில் அலுவலகம் மற்றும் சரக்கு பெட்ட வசதி, லாரிகளை நிறுத்த போதிய இடம் கோரி புதுவை லாரி உரிமையாளர்கள், முகவர்கள், டிரான்ஸ்போர்டர்கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து அவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அவர்களின் போராட்டத்திற்கு அகில இந்திய தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
முன்னதாக புதுவைக்கு சரக்கு லாரிகளை அனுப்பி வைப்பதற்கான புக்கிங் நேற்று முன்தினம் முதலே நிறுத்தப்பட்டது. இது தவிர வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் புதுவைக்கு வந்து செல்லும் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. காலை 6 மணிக்கு முன் வந்த லாரிகள் புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் 6 மணிக்கு மேல் வந்த லாரிகள் புதுவை எல்லையில் நிறுத்தப்பட்டன. இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புடைய வர்த்தகம் பாதிக்கப்படும் என்று லாரிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் ரூ100 பத்திரம்.. வீட்டு உபயோக பொருள் முதல் ரேஷன் கார்டு வரை கிஃப்ட்! லாபத்தில் மக்கள் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications