For Daily Alerts
Just In
அட்டாக் பாண்டியின் அண்ணன் இருளாண்டி கைது
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ரொம்ப காலமாக தலைமறைவாகவே இருந்து வரும் அட்டாக் பாண்டியின் அண்ணன் இருளாண்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் பொட்டு சுரேஷ் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வருகிறார். பல மாதஙக்ளாக தலைமறைவாக இருந்து வரும் பாண்டியைப் பிடிக்க போலீஸார் எடுத்து வரும் நடவடிக்கைள் இதுவரை பலன் தரவில்லை.
இந் நிலையில், அவரது அண்ணன் இருளாண்டி என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை சுப்பிரமணிபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திப் பார்த்தனர். ஆனால் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பாண்டி மனைவி தயாளு, மாமனார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளது நினைவிருக்கலாம்.
English summary
Madurai police have arrested the brother of Attack Pandi.
Story first published: Thursday, July 18, 2013, 12:39 [IST]