சொர்ணமால்யா காரை உரசிய தொழிலதிபர்.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம்.. போலீஸ் சமரசம்!

Subscribe to Oneindia Tamil

Swarnamalya's car damaged in accident
சென்னை: நடிகை சொர்ணமால்யா காரை ஒரு தொழிலதிபரின் கார் உரசி சேதம் ஏற்படுத்தியதால், கோபமடைந்த நடிகை நடு ரோட்டில் சண்டை பிடிக்க ஆரம்பித்தார். பின்னர் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.

சென்னை பாண்டிபஜாரில் நேற்று பகலில் 2 கார்கள் உரசிக்கொண்டன. இதில் ஒரு காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த கார், நடிகை சொர்ணமால்யாவுக்கு சொந்தமானது. அப்போது அவர் காருக்குள்தான் இருந்தார்.

விபத்து நடந்ததும் காரைவிட்டு இறங்கிய அவர், உரசிய காருக்குள் இருந்த தொழில் அதிபருடன் கடும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். பொதுமக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். நடுரோட்டில் வாக்குவாதம் வேண்டாம் என்று கூறி, சொர்ணமால்யாவையும், தொழில் அதிபரையும் போலீசார், பாண்டிபஜார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. வழக்கு எதுவும் வேண்டாம் என்றும், சேதம் அடைந்த தனது காரை சரி செய்து கொடுத்தால் போதும் என்றும், சொர்ணமால்யா கேட்டார். அதற்கு தொழில் அதிபரும் ஒப்புக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+