பெங்களூரு: விப்ரோ நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சர்ஜாபூர் ரோட்டில் உள்ள விப்ரோ நிறுவன அலுவலகத்துக்கு இன்று பிற்பகலில் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், விப்ரோ நிறுவனத்தை சுற்றி 19 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் குண்டுகள் வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

Wipro evacuated following bomb threat in Bangalore

இது குறித்து விப்ரோ நிறுவன அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் அங்கு வந்தனர்.

ஊழியர்களை உடனடியாக வெளியேற்றிய காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்குள்ள ஒவ்வொரு அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் விப்ரோ நிறுவனத்திற்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+