சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும்: கருணாநிதி

இது தொடர்பாக கேள்வி பதில்' வடிவிலான அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
கேள்வி :- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் 12-7-2013 அன்று தமிழில் வாதாட நீதிபதி அனுமதி மறுத்ததைப் பற்றி 15-7-2013 தேதிய "முரசொலி"யில் தாங்கள் விரிவாக எழுதியிருந் தீர்கள். அதற்குப் பிறகு அதே நீதிபதி அவர்கள் தனது உத்தரவைத் திரும்பப் பெற்று தமிழில் வாதாட அனுமதி அளித்திருக்கிறாரே, இது உங்களுக்குக் கிடைத்த வெற்றிதானே?
பதில் :- இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி. நான் என்னுடைய கடிதத்தில் அந்த நீதிபதியைக் குறையாக எதுவும் சொல்லவில்லை. அவரே அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவை எடுத்துச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பினை எடுத்துக்காட்டியதையும் நான் விளக்கியிருந் தேன். நான் மட்டுமல்ல; தமிழ் உணர்வு படைத்த வழக்கறிஞர்களும் இதற்காகக் குரல் கொடுத்தனர்.
இவற்றைத் தொடர்ந்து, நீதிபதி அவர் களும், தான் முன்பு கூறியதில் பிடிவாதம் காட்டாமல், தான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி, தமிழில் வாதாட அனுமதிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இதற்காக முதலில் கோரிக்கை வைத்த வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் அவருக்கும் எனக்கும் ஆதரவாக போராடத் துணிந்த ஏனைய வழக்கறிஞர்களுக்கும், தமிழில் வாதாட அனுமதியளித்த நீதியரசர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையே முன்மாதிரியாகக் கொண்டு உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் அனைவரும் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications