சஞ்சய்தத்தின் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்தின் மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் சஞ்சய்தத் சிறைக்குப் போக நேரிட்டது.
மேலும் அவர் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அவர் வேறுவழியின்றி சிறையில் இருந்தே ஆக வேண்டும்.












Click it and Unblock the Notifications