அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதால் ரூபாய் மதிப்பு உயருமா?: ஜெயலலிதா
சென்னை: பொதுத் துறை நிறுவனங்களில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தாது என்று முதல்வர் ஜெயலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று விடுதுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் கடந்த பல ஆண்டுகளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்மை அதிகரிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தொழில்துறையை பாதிக்கும்.
தொலைத் தொடர்பு துறையில் 74 சதவிதம் முதல் 100 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் தொலை தொடர்ப்பு துறை முழுமையாக வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.
அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தாது என்றும் முதல்வர் ஜெயலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.