ராமசாமி படையாச்சி சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு… பாமக, வன்னியர் சங்கம் மறியல்.. பயணிகள் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே ராமசாமி படையாச்சி சிலையை அகற்றியதைக் கண்டித்து பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து, வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் பயணிகள் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி எல்லையில் உள்ள மதகடிப்பட்டு பகுதியில் புதுவை நுழைவு வாயில் உள்ளது. இங்குள்ள கோப்பெருந்தேவி சிலை எதிரே நேற்று அதிகாலை 3 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்கம் மற்றும் பாமக சார்பாக ராமசாமி படையாச்சி சிலை நிறுவப்பட்டது. நேற்று காலை அந்த வழியே சென்ற மக்கள் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ராமசாமி படையாச்சி சிலையை அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.அதை எதிர்த்து, 100க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சிலையை மீண்டும் வைக்கும் வரை மறியல் போராட்டம் நீடிக்கும் என்று கூறியதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பயணிகள், மாணவ, மாணவிகள், அரசு ஊழியர், தொழிலாளர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிப்பட்டனர்.
கல்வீசி தாக்குதல்
மறியலின் போது சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது சிலர் கல் வீசி தாக்கி முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். உடனே, போலீசார் தடியடி நடத்தியதால் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சாலையில் நின்றிருந்த 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் லாரி கண்ணாடிகளை தடியால் உடைத்தனர். அதில், பேருந்தில் பயணம் செய்த 3 வயது சிறுமிக்கு மண்டை உடைந்து தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. பலத்த காயமடைந்த அந்த சிறுமியை மதகடிப்பட்டு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் சிலரும் தாக்கப்பட்டனர். அதனால், அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications