தாய்லாந்தில் லாரி மீது பஸ் மோதி 19 பேர் பலி, 20 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்தில், இரண்டடுக்கு பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்த விபத்ஹ்டில் 19 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள்.

இன்று அதிகாலை பாங்காக் நகரில் இருந்து, சுமார் 50 பயணிகளுடன் ராய் எட் நோக்கி புறப்பட்ட இரண்டடுக்கு பேருந்து ஒன்று, மத்திய சரபுரி மாகாண நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மீது மோதியது.

இதில், பேருந்தில் தீப்பற்றியது. அதிகாலை நேரத்து தூக்கத்தில் இருந்ததால், பயணிகள் சுதாரிக்கத் தாமதம் ஆனது. தீயின் கோர நாக்குகளுக்கு சிக்கி 18 பேர் பலியானார்கள். பின்னர் காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒரு பயணி மரணமடைந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த 20 பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+