மகளின் மர்ம மரணத்துக்கு காரணம் கோரி லண்டனில் போராடும் சென்னை இன்ஸ்பெக்ட்ர்

சென்னை அண்ணாநகர் மேற்கு பாலாஜி நகரில் வசித்து வருபவர் தாம்சன். இவர் முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜார்ஜினா லண்டன் லிவர்புல் பல்கலைக் கழகத்தில் ஏரோனாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் படித்து வந்தார்.
இவரது விண்வெளி பயண ஆர்வத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வியந்து பாராட்டினார். இதுவரை விண்வெளிக்குப் போன கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இந்திய வம்சாவளியினர். ஆனால் இந்தியாவிலேயே பிறந்து அதுவும் தமிழகத்தில் பிறந்து விண்வெளிக்கு எதிர்காலத்தில் பயணிக்கக் கூடிய வாய்ப்புள்ளவராக கருதப்பட்டவர் ஜார்ஜினா.
ஆனால் கடந்த 13-ந் தேதி திடீரென லிவர்புல் பல்கலைக் கழகத்தில் இருந்து ஜார்ஜினாவின் தந்தை தாம்சனுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ‘உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறப்பட்டது. இதனால் பதறி அடித்துக் கொண்டு லண்டன் போனார் தாம்சன். ஆனால் அவர் அங்கு போய்ச் சேருவதற்குள் ஜார்ஜினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது.
ஆனால் தமது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவளது மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன எனத் தெரிவிக்க வேண்டும் என்றும் லிவர்புல் பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் போலீசாரிடம் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார் தாம்சன். உண்மையான காரணத்தை தெரிவிக்கும் வரை தமது மகளின் உடலை பெற முடியாது என்று கூறி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடியிருக்கிறார் தாம்சன். இன்று வரை தமது மகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய முடியாமல் தவிப்பில் இருக்கிறார் அவர்.
-
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார்












Click it and Unblock the Notifications