மகளின் மர்ம மரணத்துக்கு காரணம் கோரி லண்டனில் போராடும் சென்னை இன்ஸ்பெக்ட்ர்

சென்னை அண்ணாநகர் மேற்கு பாலாஜி நகரில் வசித்து வருபவர் தாம்சன். இவர் முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜார்ஜினா லண்டன் லிவர்புல் பல்கலைக் கழகத்தில் ஏரோனாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் படித்து வந்தார்.
இவரது விண்வெளி பயண ஆர்வத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வியந்து பாராட்டினார். இதுவரை விண்வெளிக்குப் போன கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இந்திய வம்சாவளியினர். ஆனால் இந்தியாவிலேயே பிறந்து அதுவும் தமிழகத்தில் பிறந்து விண்வெளிக்கு எதிர்காலத்தில் பயணிக்கக் கூடிய வாய்ப்புள்ளவராக கருதப்பட்டவர் ஜார்ஜினா.
ஆனால் கடந்த 13-ந் தேதி திடீரென லிவர்புல் பல்கலைக் கழகத்தில் இருந்து ஜார்ஜினாவின் தந்தை தாம்சனுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ‘உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறப்பட்டது. இதனால் பதறி அடித்துக் கொண்டு லண்டன் போனார் தாம்சன். ஆனால் அவர் அங்கு போய்ச் சேருவதற்குள் ஜார்ஜினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது.
ஆனால் தமது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவளது மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன எனத் தெரிவிக்க வேண்டும் என்றும் லிவர்புல் பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் போலீசாரிடம் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார் தாம்சன். உண்மையான காரணத்தை தெரிவிக்கும் வரை தமது மகளின் உடலை பெற முடியாது என்று கூறி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடியிருக்கிறார் தாம்சன். இன்று வரை தமது மகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய முடியாமல் தவிப்பில் இருக்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications