'அந்த' இடத்தில் கொத்திய பாம்பு.. துடிதுடித்துப் போன இளைஞர்!
டெல் அவிவ்: பாம்பு காலில் கடிக்கும், கையில் கடிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இஸ்ரேலில் ஒரு ஆணின் ஆணுறுப்பில் பாம்பு கடித்து விட்டது.
இஸ்ரேலின் ஹைபா என்ற ஊரைச் சேர்ந்தவர் அந்த நபர். 35 வயதாகிறது. சம்பவத்தன்று தனது வீட்டு பாத்ரூமில் இவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பாத்ரூமில் இருந்த குழாய் வழியாக ஒரு பாம்பு உள்ளே வந்து விட்டது.
குழாய்க்கு நேராக உட்கார்ந்து குளித்துக் கொண்டிருந்தார் அந்த நபர். குழாய் மூலம் வந்த பாம்பு, நேராக அந்த நபரின் ஆண்குறியில் கொத்தி விட்டது. வலியால் துடித்த அந்த நபர், அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.
பின்னர் ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தார். அவர்கள் வந்து அந்த இளைஞரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கடித்த பாம்பு விஷப் பாம்பு இல்லை என்றும், விஷம் ஏறவில்லை என்றும் ஆறுதல் வார்த்தைகளை வெளியிட்டனர்.
இருப்பினும் அவரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications