ஹரியானாவில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 879 மாணவர்களுக்கு மயக்கம், வயிற்று வலி
சன்டிகர்: ஹரியானாவில் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்ட 879 மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி மற்றும் மயக்க உணர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார், ஜிந்த், சோனிபட், குர்காவ்ன் மற்றும் பரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 16 லட்சம் மாணவ, மாணவியருக்கு இரும்புச் சத்து மாத்திரை நேற்று முன்தினம் அளிக்கப்பட்டுள்ளது. மாத்திரையைச் சாப்பிட்டவர்களில் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 150 மாணவிகள் உள்பட 879 பேருக்கு வயிற்று வலியும், மயக்க உணர்வும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வாரந்தோறும் இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் தான் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications