அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழை: யாரும் வீட்டை விட்டு வெளிய வர வேண்டாம்
மும்பை: மும்பையில் அடுத்த 72 மணிநேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 72 மணிநேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நேற்று பெய்த கனமழையால் மும்பையில் ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மெட்ரோபாலிடன் கூடுதல் கமிஷனர் எஸ்.வி.ஆர். ஸ்ரீனிவாஸ் கூறுகையில்,
இன்று கனமழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு சாலைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி எனது ஆட்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். சாலைகளை சீரமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெறும் என்றார்.

நேற்று மும்பையில் ரயில்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றன. தாதர் பகுதியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications