மோடியை விமர்சிக்கும் அமர்த்யா சென் இந்தியரே இல்லை...: சு.சுவாமி பொளேர்!
Subscribe to Oneindia Tamil

மோடிக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா குரல் கொடுத்து வருகிறது. இந்த குரலுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், அமர்த்யா சென் ஒரு இந்தியரே அல்ல. அவர் பெங்காலி மனைவியை கைவிட்டு விட்டு 2 வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டவர். அமர்த்யா சென் வெளிநாட்டில் வசிப்பவர். அவ்வப்போது இந்தியா வருவார். அதனாலேயே அவர் இந்தியராகிவிட முடியாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்திலே அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாலும் அவரிடம் இருந்து அதை பறிக்க வேண்டும், ஒரு வல்லுநர் என்பவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து எழுதும்போது அதற்கான எதிர்வினையை எதிர்கொண்டாக வேண்டும்.












Click it and Unblock the Notifications