ஆள் வைத்து வெட்டிய விவகாரம்… ஜெ. பேரவை செயலாளர் திடீர் கைது!
சென்னை: அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை வெட்டிய வழக்கில் சென்னை தாமஸ்மலை ஒன்றிய கிழக்கு மண்டல ஜெயலலிதா பேரவை செயலாளர் மீனா சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிவாக்கம் 183வது வட்ட அ.தி.மு.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பரில் அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் கிருஷ்ணமூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.
இந்த நிலையில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி, ஏழுமலை ஆகியோரை குற்ற வழக்கு ஒன்றில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை தாமஸ்மலை ஒன்றிய கிழக்கு மண்டல ஜெயலலிதா பேரவை செயலாளர் மீனா சேகர் தூண்டுதலின் பேரில் கிருஷ்ணமூர்த்தியை வெட்டியது தெரியவந்தது.
இந்த நிலையில், இவர்கள் இரண்டு பேரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை தாமஸ்மலை ஒன்றிய கிழக்கு மண்டல ஜெயலலிதா பேரவை செயலாளர் மீனா சேகரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் செபாஸ்டின், சாதிக் பாட்சா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications