ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்: பெரிய விபத்தில் இருந்து தப்பிய ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அமேத்தியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். அவருடன் அவரது சகோதரி பிரியங்காவும் சென்றிருந்தார். விழாவை முடித்துக் கொண்டு ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பிரியங்கா ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் அமேத்தியில் இருந்து டெல்லி கிளம்பினர்.

அப்போது மோசமான வானிலை காரணமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்ல வேளையாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அமேத்தியில் கட்சியை பலப்படுத்தும் பணியில் ராகுலும், பிரியங்காவும் ஈடுபட்டுள்ளனர். அமேத்தி ராகுலின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications