குறி வைத்து இந்துத் தலைவர்களைத் தாக்குகிறார்கள் - பாஜக புகார்

Subscribe to Oneindia Tamil

BJP to raise TN hindu actvists murder issue in Parliament
வேலூர்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள். இதை நாடாளுமன்றத்தில் பிரச்சினையாக எழுப்புவோம் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் கொல்லப்பட்ட இந்து முன்னணி, பாஜக பிரமுகர்களின் இல்லங்களுக்கு இன்று பாஜக தலைமையால் அனுப்பப்பட்ட குழு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் கூறியது.

பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான இக்குழுவில் லோக்சபா எம்.பி. ஆனந்த் ஹெக்டே, செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் தமிழக பாஜக நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்திரபாண்டியனும் உடன் இருந்தனர்.

முதலில் வேலூரில் கொலை செய்யப்பட்ட பாஜக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யபட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ரெட்டி வீட்டுக்குச் சென்று அவரது மனைவி கவிதாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதைத் தொடர்ந்து இந்து முன்னணி மாநில பொது செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யபட்ட இடத்தை பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யபட்ட இடத்தை சேலத்தில் பார்த்தோம்.

வேலூரில் கொலை செய்யபட்ட அரவிந்த் ரெட்டி மற்றும் வெள்ளையப்பன் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம். தொடர்ந்து எங்களது இயக்க பொறுப்பாளர்களை குறி வைத்து தாக்குகிறார்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+