சட்டம், ஒழுங்கு பற்றி கொடநாட்டில் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை
சென்னை: தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
கடந்த 1ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 19ம் தேதி சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டார். இந்த கொடூரங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வன்முறை குற்றங்களை கடும் நடவடிக்கைகள் மூலம் வேரோடு கிள்ளிய எறிய வேண்டும் என்று தெரிவித்தார். இது தவிர இந்த 2 கொலைகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவர் கொடநாட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றியும், அது தொடர்பானவை பற்றியும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், முதல்வரின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications