தூக்கு ரத்து கோரும் மனுக்களை விசாரிக்க தனி பெஞ்ச்- அக்.22 முதல் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

No Death Penalty
டெல்லி: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்களை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அக்டோபர் 22-ந் தேதி முதல் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் அறிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நீதிபதி சதாசிவம், கருணை மனுக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய வழக்குகளில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து தெளிவான தீர்ப்பு வழங்கும் வகையில் இத்தகைய வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட தனி அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதனடிப்படையில் நேற்று தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய பெஞ்ச், நிலுவையில் உள்ள ஜனாதிபதியால் கருணை மனுக்கள் காலதாமதமாக தள்ளுபடி செய்யப்பட்டதால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்குகளை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும். தசரா விடுமுறை முடிந்ததும் அக்டோபர் 22-ந்தேதி முதல் இந்த வழக்குகள் மீதான விசாரணை தொடங்கும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+