தெலுங்கானா இறுதி முடிவு.. நாளை காங். காரியக் கமிட்டி கூட்டம்!
டெல்லி: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நாளை மாலை டெல்லியில் நடைபெற உள்ளது.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கை விவகாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைப்பதுடன் காங்கிரஸின் வாக்கு வங்கியான இஸ்லாமியர்கள், தலித்துகளை உள்ளடக்கிய ராயலசீமாவின் 2 மாவட்டங்களையும் இணைத்து ராயல தெலுங்கானாவை உருவாக்குவது என்பது காங்கிரஸ் முடிவு.
தொடக்கத்தில் ஆந்திராவை பிரிப்பதில் கடும் எதிர்ப்பு தெரிவித்த கடலோர ஆந்திரா, ராயலசீமா காங்கிரஸார் தற்போது மெல்ல மெல்ல ஏற்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆந்திர பிரிவினைக்கு கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் கோரப்பட உள்ளது.
இக்கூட்டம் முடிவடைந்த பிறகு மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இதில் தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இறுதி நிலைப்பாடு என்ன என்று தீர்மானிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications