For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 வருஷமா அப்பாவின் செக்ஸ் தொல்லை தாங்கல: தயாரிப்பு நிறுவன சிஇஓ மகள் போலீசில் புகார்

By Siva
Google Oneindia Tamil News

புனே: புனேவில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சிஇஓ தனது 19 வயது மகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

புனேவில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சிஇஓவாக இருப்பவர் தனது 19 வயது மகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தான் பதவி உயர்வு பெறுவதற்காக தனது மகளை தன் உயர் அதிகாரிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.

இது தவிர அப்பெண்ணின் தாத்தா வேறு அவரிடம் தவறாக நடந்துள்ளார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை அவரது பாட்டி மற்றும் தந்தையின் நண்பர் சேர்ந்து அடித்து ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளனர்.

தனது தந்தையின் உயர் அதிகாரிகளுடன் உல்லாசமாக இருக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் தந்தையிடம் இருந்து பிரிந்து தனியாக வாழும் தாயிடம் எப்படியோ சென்ற அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார். உடனே அவர் தனது மகளுடன் கொரேகாவ்ன் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு அந்த இளம்பெண் தனது தந்தை மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A 19-year old girl gave a sexual assault complaint against her father who is a CEO of a manufacturing company in Pune.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X