69% இடஒதுக்கீட்டால் பாதிப்பு.. மருத்துவ படிப்பில் கூடுதலாக 19% இடம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: 69% இடஒதுக்கீடால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் கூடுதலாக 19% இடங்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 69% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இட ஒதுக்கீடு காரணமாக பொதுப்பிரிவில் கூடுதல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று சென்னையைச் சேர்ந்த ஹர்ஷினி என்ற மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் 69% இட ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்படும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் கூடுதலாக 19% இடங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications