122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்!

தெலுங்கானா தனி மாநிலத்துக்கு காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் ஒப்புதல் கொடுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இனி தொடங்கும்..
முதலாவதாக ஆந்திர மாநில சட்டசபையில் தெலுங்கானா தனி மாநில தீர்மானம் நிறைவேற்ற குறிப்பு அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். பின்பு தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமான பகுதிகளின் நீர், நிலப்பரப்பு, மின்சாரம், வருவாய் ஆகியவை பகிர்வு தொடர்பாக ஆராய அமைச்சர்கள் குழு நியமிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தொடர்பாக சட்ட வரைவை உருவாக்குமாறு சட்ட அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்படும். அதன் மீது ஆந்திர சட்டசபை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கருத்துகள் கேட்கப்படும்.
பின்னர் பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்காக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். இத்தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த பின்பு தெலுங்கானா தனி மாநிலம் நடைமுறைக்கு வரும்.
இத்தனை நடைமுறைகளையும் முடிவடைய 4 மாத காலமாகிவிடும்.. அதன்பின்புதான் தெலுங்கானா பிறக்கும்!!












Click it and Unblock the Notifications