விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் மீது 2வது அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

2nd defamation case against Premalatha Vijayakanth
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மீது 2வது அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது. அதேபோல விஜயகாந்த்தின் மைத்துனரான சுதீஷும் இந்த அவதூறு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதற்காக இந்த வழக்கு பாய்ந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கைப் போட்டுள்ளார். அதில், கடந்த 1-1-13 அன்று கேப்டன் டி.வி. செய்தியில் முதல்வர் ஆன பிறகு ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதக்கிறார் என்பது உள்பட பல்வேறு தகவல்களை அவதூறாக வெளியிட்டனர்.

எனவே கேப்டன் டி.வி. தலைவர் பிரேமலதா, நிர்வாக இயக்குனர் சுதீஷ், செய்தி வாசிப்பாளர்கள் செம்மலர், ரமேஷ், கிரிஜா ரவிசங்கர், சிங்கார வேலர் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பிரேமலதா மீ்து ஜெயலலிதா தொடுத்துள்ள 2வது அவதூறு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+