ஸ்பெயின் ரயில் விபத்து: ‘போன்’ பேசியபடி டிரைவர் ரயிலை ஓட்டியது விசாரணையில் அம்பலம்
மேட்ரிட்: படுமோசமாக விபத்துக்குள்ளாகி, 79 பயணிகளின் உயிரை குடித்த ஸ்பெயின் ரயில் விபத்து ஏற்பட அந்த ரயிலை ஓட்டி வந்த டிரைவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததே காரணம் என தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்ற வாரம், ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் இருந்து ஃபெர்ரால் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று பயங்கரமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 79 பயனிகள் பரிதாபமாக பலியானார்கள். படுகாயங்களுடன் 66 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக வேகத்தில் வந்ததே ரயில் தடம் புரளக் காரணாம் என ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், விபத்து நடப்பதற்கு முன் ரயிலின் டிரைவர் கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் உரையாடியது கருப்பு பெட்டி ஒலிப்பதிவுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ரயில் டிரைவர் பிரான்சிஸ்கோ கர்சான், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது, ‘அனுமதிக்கப்பட்டதை விட இருமடங்கு அதிக வேகத்தில் வந்ததே விபத்து ஏற்படக் காரணமாக அமைந்ததாக' வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications