For Quick Alerts
For Daily Alerts
Just In
2 ஜி: கனிமொழி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற வழக்கில் சி.பி.ஐ சுமத்தியுள்ள குற்றச்சட்டுக்களை ரத்து செய்யக் கோரி தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மட்டும் பரிசீலித்து கனிமொழி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments
English summary
The Supreme Court has ordered CBI to file its reply on Kanimozhi's petition seeking to quash 2g case against her.
Story first published: Thursday, August 1, 2013, 17:02 [IST]