போடோலாந்து, கர்பி அங்லாங் மாநிலங்களை உருவாக்கக் கோரி அசாமில் போராட்டம் தீவிரம்!!
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: தெலுங்கானாவைத் தொடர்ந்து அசாமை 3 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. போடோலாந்து, கர்பி அலாங் மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன.
கர்பி அங்கலாங் மாவட்டத்தில் நேற்று பெரும் வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் பலியானார். மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 12 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்தும் வடகிழக்கு மாநிலத்துக்கு செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களால் அசாமில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications