கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொலம்பியா நாட்டில் நடைபெற்ற 54வது கணித ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

1959ம் ஆண்டு ருமேனியாவில் தொடங்கப் பட்ட கணித ஒலிம்பிக் போட்டிகள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உலக அளாவில் நடத்தப்படும் கணிதப் போட்டியாகும். ஆரமப்த்தில் வெறும் 7 நாடுகளின் பங்களிப்போடு மட்டுமே தொடங்கப்பட்ட இப்போட்டியில் தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகள் வரை கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாட்டில் நடத்தப்படும் இப்போட்டியின் விதிமுறைகளையும், , மரபுகளையும் கணித ஒலிம்பிக் போட்டியின் ஆலோசனை வாரியம் கவனித்துக் கொள்கிறது. இந்தாண்டிற்கான 54வது கணித ஒலிம்பிக் போட்டி, கொலம்பியா நாட்டில் சாண்டா மார்தா என்ற இடத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், 97 நாடுகளில் இருந்து மொத்தம் 528 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், இந்தியாவில் இருந்து 6 மாணவர்கள் பங்கேற்றனர். இம்மாணாவர்களுக்கான அனைத்து செலவுகளையும் மும்பையில் உள்ள டாட்டா ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி நிறுவனம் வழங்கியது.

இந்த 54வது கணித ஒலிம்பிக் போட்டியில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்ககலப் பதக்கங்களையும் இந்திய மாணவர்கள் பெற்றனர். இம்மாணவர்களில், கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கிக் சஹா, டெல்லியைச் சேர்ந்த சுபம் சின்ஹா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், பிலாயைச் சேர்ந்த பல்லவ் கோயல், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரணாப் நுதி மற்றும் புனாவைச் சேர்ந்த அனீஷ் பிரசாத் செவேகரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் சென்ற மற்றொரு மாணவரான பூனாவைச் சேர்ந்த சைத்தன்யா தபு என்பவர் எந்தப் பதக்கங்களையும் பெறவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+