பாக். சிறையில் கொல்லப்பட்ட இந்திய கைதி சரப்ஜித் சிங் மகள் சப் கலெக்டர் ஆனார்…: பஞ்சாப் அரசு கௌரவம்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி இந்தியரான சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி சிறையில் இருந்த அவர், கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
இதையடுத்து லாகூர் நகரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங், கடந்த மே மாதம் 2ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சரப்ஜித் சிங்கின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப் மாநில அரசு 3 நாள் துக்கம் கடைபிடித்தது. அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கியது. சரப்ஜித் சிங்குக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், 'சரப்ஜித் சிங் மகளுக்கு அரசு வேலை வழங்கப்படும்' என உறுதியளித்தார்.
அதன்படி சரப்ஜித் சிங்கின் மகள் சுவபன்தீல் கவுரை உதவி கலெக்டராக நியமித்து பஞ்சாப் முதல்வர் இன்று உத்தரவிட்டார். இதற்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கி வாழ்த்திய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ‘நாட்டிற்காக சரப்ஜித்சிங் செய்த மிகப்பெரிய தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது மகளை இந்த பதவியில் அமர்த்தி பஞ்சாப் அரசு காணிக்கை செலுத்துகிறது' என்றார். ‘ஒரு இந்தியர் என்பதற்காகவே பாகிஸ்தான் ஜெயிலில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த சரப்ஜித் சிங் ஒரு தேசிய தியாகி' என்றும் அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications