ஆந்திர நகரங்களை விட்டு வெளியேறும் தெலுங்கானா மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலப் பிரிவினையைத் தொடர்ந்து இப்பகுதியைச் சேர்ந்த பிற ஆந்திர நகரங்களில் படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்குப் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

அதாவது ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் இயாம்செட் என்ற நுழைவுத் தேர்வை எழுதுவதில் புதுப் பிரச்சினையை இவர்கள் சந்திக்கவுள்ளனர்.

கிட்டத்தட்ட 50,000 தெலுங்கானா மாணவர்கள் பல்வேறு ஆந்திர நகரங்களில் படித்து வருகிறார்களாம். இயாம்செட் விதிப்படி, ஒரே மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களே அந்தத் தேர்வை எழுத முடியும்.

எனவே தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது மாநிலப் பகுதியில் இந்தத் தேர்வை எழுத விரும்புகிறார்களாம். எனவேதான் தெலுங்கானாவுக்கு திரும்ப அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இயாம்செட்டும் பிரியும்

தற்போது ஆந்திராவை இரண்டாகப் பிரிக்க முடிவெடுத்திருப்பதால் இயாம்செட்டும் இரண்டாக பிரிக்கப்படும் என்று தெரிகிறது.

தெலுங்கானா பகுதிக்கு தனி தேர்வு

இதன்படி தெலுங்கானா பிராந்தியத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு தனியாக தேர்வு வைக்கப்படும். இதை எழுதாவிட்டால் அவர்களுக்கு தெலுங்கானா பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில்இடம் கிடைப்பது சிக்கலாகும்.

மொத்தமாக கிளம்புகிறார்கள்

இந்தப் புதிய பிரச்சினையால் தெலுங்கானா பகுதி மாணவர்கள், பிற ஆந்திரப் பகுதிகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குக் கிளம்ப முடிவு செய்துள்ளனராம்.

ஆந்திராவில்தான் நிறைய கல்லூரிகள்

தெலுங்கானாவை விட பிற ஆந்திரப் பகுதிகளில்தான் நிறைய நல்ல கல்லூரிகள் உள்ளதால் இங்கு வந்து படிப்பதையே தெலுங்கானா மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் தற்போது மாநிலப் பிரிவினையாலும், இயாம்செட் குழப்பத்தாலும் சொந்த ஊர்களுக்கு கிளம்ப வேண்டிய நிலை வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+