ஸ்டெர்லைட் வழக்கு: விதிமுறை வகுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை 2 வாரத்தில் வகுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சுவாயுவைத் தொடர்ந்து, அந்த ஆலையை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அஜரான வழக்கறிஞர், ஸ்டெர் லைட் ஆலையின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார்.
இதற்கு இரண்டு வாரம் கால அவகாசம் தேவை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரண்டு வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஸ்டெர் ஆலைக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தேசிய பசுமை தீர்பாயம் ஆலைய இயக்க இடைக்கால அனுமதி மட்டுமே அளித்திருப்பதால் ஸ்டெர் லைட் ஆலைக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.