எல்லாரும் மேல பாருங்க, ‘அண்ணாமலை’ சைக்கிள் ரெக்கை கட்டி பறக்குது...
லண்டன்: 'ரெக்கை கட்டி பறக்குதடி, அண்ணாமலை சைக்கிள்...' என நம் சூப்பர் ஸ்டார் கண்ட கனவை நனவாக்கியிருக்கிறார்கள் இங்கிலாந்துக்காரர்கள்.
ஆம், உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம், பூமியிலும் ஓட்டலாம்.
இதை வாங்கிக் கொண்டு வானில் பறந்தால், ரோட்டில் டிராபிக்காவது குறையும்...

பறக்கும் சைக்கிள்...
உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர்களான ஜான் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

ரெக்கை கட்டிய சைக்கிள்...
இதில், சாதாரண சைக்கிளுடன், இறகுகள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள காற்றாடிகள் சுழலும் போது சைக்கிள் உயர பறக்கிறது. காற்றாடிகளைச் சுழல வைக்க இயற்கை எரிசக்தியே பயன் படுத்தப் படுவது இதன் சிறப்பம்சம்.

சூப்பர் உயரம்.. சூப்பர் வேகம்...
தரையிலிருந்து சுமார் 4,000 அடி உயரத்தில், 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது இச்சைக்கிள்.

பறக்கலாம்... ஓட்டலாம்...
இச்சைக்கிளுக்கு லைசென்ஸ்-ம் தேவையில்லை, பெட்ரோல், டீசல் தேவையுமில்லை. தேவைப்படும் போது, இச்சைக்கிளை தரையில் சாதாரண சைக்கிள் போன்றும் ஓட்ட இயலும்.

பணம் தான் பத்தலை...
வணிக ரீதியான தயாரிப்புக்கு ஏற்ற பண உதவி கிடைத்தால் உடனே மார்க்கெட்டுக்கு வந்து விடுமாம் இந்த ‘பறக்கும் சைக்கிள்'












Click it and Unblock the Notifications