பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனத்தை இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான பதற்றநிலை அதிகரித்து வந்தது. இதனிடையே இருதரப்பும் மீண்டும் பேச்சுகளைத் தொடங்க தீர்மானித்திருந்தது.
இந்நிலையில்தான் இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதலை நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு இன்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரை நேரில் அழைத்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடைபெற்ற இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications