லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றி உறுதி: வீ.வ.வா தலைவர் மு.பாண்டியன்!
அம்பை: லோக்சபா தேர்தலில் அம்மாவின் தலைமையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்மக்களிடம் துண்டு பிரச்சுரம் வழங்கும் நிகழ்ச்சி அம்பாசமுத்திரத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் பசியுடன் இல்லை. உணவு பஞ்சுமும் இல்லை. தமிழக அரசுதிட்டங்களுக்கு மத்திய அரசு தடை போட்டு வருகிறது. இப்படி போனால் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். நீதிமன்றத்தை நாடிதான் ஒவ்வொன்றாக செய்ய வேண்டியது உள்ளது.
வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும். முதல்வர் அம்மா பாரத பிரதமர் ஆவதற்கு நீங்கள் அனைவரும் ஓத்துழைப்பு தர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரச்சுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications