என் புருஷன் மீது மின்சாரம் பாய்கிறதே, பதறிப் பிடித்த மனைவியும் பலி
Subscribe to Oneindia Tamil
குமரி: கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சமாதானபுரத்தசை் சேர்ந்தவர் ஏசுவடியான். அவரது மனைவி ப்ரீத்தி. ஏசுவடியான் இன்று காலை ஆடையை அயர்ன் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. கணவர் மீது மின்சாரம் பாய்ந்ததை பார்த்த ப்ரீத்தி அவரை காப்பாற்ற நினைத்து ஓடி வந்தார்.
கணவரை தொட்ட ப்ரீத்தி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications