இதல்லவோ மனிதாபிமானம்.. மத நல்லிணக்கம்.. ப்ளீஸ் இதை கண்டிப்பாக படிக்கவும்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மதங்களின் பெயரை சக மனிதர்களை மாய்த்துக் கொள்ளத் துடிக்கும் கும்பல்களுக்கு மத்தியில் மத சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு மனிதாபிமானத்துடன் சிறுநீரக தானம் கொடுத்தவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திதான் இது..

பெங்களூரைச் சேர்ந்த விஸ்வநாதா பட்டா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் டயாலிஸ் செய்து வருகிறார்..அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரது மனைவி உஷா தமது சிறுநீரகங்களில் ஒன்றை கணவருக்காக கொடுக்க முன்வந்தார். ஆனால் இருவரது ரத்த மாதிரியும் ஒன்றாக இல்லாததால் சிறுநீரகம் பொருத்தமுடியவில்லை.

இதேபோல் பெங்களூரைச் சேர்ந்த 60 வயதான அப்துல் கலீல் என்பவரும் கடந்த 18 மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டார். அவரது மனைவி அபிதா கலீலும் தமது சிறுநீரகத்தை கணவருக்கு தானமாக கொடுக்க முன்வந்தார். ஆனால் அபிதாவின் ரத்த மாதிரியும் கணவரின் ரத்த மாதிரியும் ஒன்றாக இல்லாததால் சிறுநீரகம் பொருத்தப்படவில்லை.

A unique Organ Donation at Bangalore Hospital

இதைத் தொடர்ந்து இரு தம்பதயினரும் பெங்களூர் நாராயணா இருதயாலாயா மருத்துவமனையை நாடினர். இதில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஹிந்துவான விஸ்வநாதா பட்டாவின் ரத்த மாதிரியும் இஸ்லாமியரான அபீதா கலீலின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருந்தது. இதேபோல் அப்துல் கலீலின் ரத்த மாதிரியும் உஷாவின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருந்தது.

இந்த இரு தம்பதியினருமே மதங்களைப் பற்றி சிந்திக்காமல் மனித உயிர்களை மதித்து சிறுநீர தானங்களுக்கு முன்வந்தனர். இதனால் விஸ்வநாத்துக்கும் அப்துல் கலீலுக்கும் 'வெற்றிகரமாக' சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இப்போது இந்த தம்பதியினர் ஹிந்துவாக, இஸ்லாமியராக இல்லை.. மதங்கடந்த மனிதர்கள்....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+