பாகிஸ்தானிடம் மென்மை போக்கு: பிரதமரிடம் பாஜக அதிருப்தி
டெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர், கொல்லப்பட்டதில் பாகிஸ்தானுக்குள்ள தொடர்பு குறித்து விரிவான அறிக்கையை அரசு, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று பிரதமரைச் சந்தித்த, பாரதிய ஜனதா தலைவர்களிடம் இதற்கான உறுதிமொழி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்தவர்களுடன் வந்த 20 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று பிரதமரைச் சந்தித்தனர். அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர்கள் தங்களது அதிருப்தியை பிரதமரிடம் தெரிவித்ததோடு, மிக மோசமான சம்பவம் நடந்துள்ளபோதிலும், பாகிஸ்தானிடம் மென்மை காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்புப் படை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சரின் அறிக்கை அதற்கு முரணாக இருப்பதாகவும் அவர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications