மாநகராட்சி என்ஜீனியர்களுக்கு லஞ்சம்... மைக்ரோமேக்ஸ் உரிமையாளர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வடக்கு டெல்லி மாநகராட்சி என்ஜீனியர்களுக்கு ரூ. 30 லட்சம் கொடுத்த வழக்கில், மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனத்தின்2 உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நிறுவனத்தின் மாநட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிக்காக அனுமதி தரக் கோரி இந்த லஞ்சத்தை மைக்ரோமேக்ஸ் உரிமையாளர்கள் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் உரிமையாளர்களான ராஜேஷ் அகர்வால் மற்றும் மனீ்ஷ் துளி ஆகியோரைக் கைது செய்த சிபிஐ அதிகாரகிள்,மாநகராட்சி அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகள்,அலுவலகங்கள் என மொத்தம் 15 இடங்களில் ரெய்டும் நடத்தப்பட்டது.
மொத்தம் ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுப்பதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அதில் 30 லட்சம் தரப்பட்டது. அப்போதுதான் சிபிஐ அதிகாரிகள் அவர்களைக் கையும் களவுமாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications