சாவதற்காகவே ராணுவத்தில் பலர் சேருகிறார்கள்... நிதீஷ் கட்சித் தலைவரின் அவதூறுப் பேச்சு
பாட்னா: ராணுவ வீரர்களையும், அவர்களின் தியாகத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார் பீகார் ஐக்கிய ஜனதாதள தலைவர் பீம் சிங். இவர் நிதீஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சரும் கூட.
இதுகுறித்து அவர் கூறுகையில், சாவதற்காகவே போய் ராணுவத்தில் சேருகிறார்கள் சிலர் என்றார் அவர். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கி 5 இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக கேட்டதற்குத்தான் இப்படிப் பேசியுள்ளார் இந்த பீம் சிங்.
நீங்கள் உடல்களைப் பெற்றுக் கொள்ள விமான நிலையம் போவீர்களா என்று செய்தியாளர்கள் இன்னொரு கேள்வியைக் கேட்டபோது, ஏன் உங்க அப்பா, அம்மா அங்க போவாங்களா என்று செய்தியாளர்களைப் பார்த்து கோபமாகவும் கேட்டு கிறுக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார் பீம் சிங்.
பீம் சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் பீம் சிங்.