ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன் மரணம் அடைந்தான்.
ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டம் ஹின்டன் சிட்டி அருகே உள்ளது சார்தா காலா. அந்த கிராமத்தைச் சேர்ந்த சோட்டு என்ற 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று மதியம் தனது வீட்டுக்கு அருகே பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவன் அங்குள்ள 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுத்தனர். சிறுவனம் 100 அடியில் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
சிறுவன் சிக்கிய கிணற்றுக்கு அருகே குழி தோண்டி அவனை காப்பாற்ற மீட்பு படையினர் முயன்றனர். ஆனால் 20 மணி நேரமாக குழியில் இருந்த சோட்டு இன்று உயிர் இழந்தான்.












Click it and Unblock the Notifications