இங்கிலாந்தில் மர்மமாக உயிரிழந்த மாணவியின் உடல் சென்னை வந்தது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்ட்ரின் மகளான ஜார்ஜியானா உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. நாளை இறுதி சடங்குகள் நடைபெறும்.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொடர்பாக படித்து வந்தார் சென்னை மாணவி. இவரது தந்தை சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்ட்ராக வேலை பார்த்து வந்தார்.

திடீரென ஜார்ஜியானா மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜார்ஜியானாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்ததை அடுத்து அங்கு மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஜார்ஜியானாவின் தந்தை, மகளின் மரணத்துக்கான காரணத்தைக் கேட்டுப் போராடினார். இருப்பினும் அவருக்கு எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை.

இதனால் அந்த மாணவியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+