மன்மோகன் சிங்கைச் சந்திக்க விரும்புகிறேன்.. நவாஸ் ஷெரீப் விருப்பம்
இந்திய வீரர்கள் மீதும், நிலைகள் மீதும் பாகிஸ்தான் படையினர் தன்னிச்சையாக நடத்திய தாக்குதலால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. இதையடுத்து நிலைமையை சுமூகமாக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.
குறிப்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் இரு தரப்பும் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வீரர்கள் பலியாகியிருப்பது வருத்தம் தருகிறது. இந்த சிக்கலான நேரத்தில் இரு நாடுகளும் போர்நிறுத்த உடன்படிக்கையை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமாகும்.
செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐநா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்துப் பேச விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பு குறித்து கருத்துக் கூற இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது.