ஆணா? பெண்ணா? ஸ்கேன் பரிசோதனை: ஷாருக்கானுக்கு மும்பை கோர்ட் நோட்டீஸ்

நடிகர் ஷாருக்கான் கவுரி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் 3-வது குழந்தை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மே 27-ந்தேதி பிறந்தது.
இந்த குழந்தை கருவில் இருக்கும்போது, அது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள விரும்பியதாக பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் தகவல்கள் வெளியானது.
கருவில் இருக்கும் போதே குழந்தை ஆணா? பெண்ணா? என ‘ஸ்கேன்' செய்து பார்க்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதை மீறுவது தண்டனைக் குரிய குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த சமூக சேவகியும் வக்கீலுமான வர்ஷா தேஷ்பாண்டே அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையை பார்த்தது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மீது ஏற்கனவே நான் புகார் செய்தேன். அதன் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தற்போது கோர்ட்டை அணுகி வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்தி ரேட்டு உதய் பாத்வாத் இது பற்றி விளக்கம் அளிக்குமாறு ஷாருக்கான் தம்பதி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 12-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
வழக்கு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், ‘‘எங்களுக்கு மகன் பிறந்து இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவன் நலமாக இருப்பான் என்று நம்புகிறோம். ஆனால் இப்போது வழக்கு தொடர்ந்து இருக்கும் தகவல் வருத்தம் அளிக்கிறது'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications