மாதா மாதம் பள்ளிகளைப் போய்ப் பாருங்கள்.. கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
நாகர்கோவில்: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதா மாதம் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று மாநில தொடக்க கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், செப்டம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 8 பள்ளிகளிலும், இதர மாதங்களில் 12 பள்ளிகளையும் பார்வையிட வேண்டும்.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நடத்திய ஆய்வுகள் அடங்கிய கோப்புகள், தமிழக அரசு அறிவித்துள்ள பலவகையான தி்ட்டங்கள், மாணவர்களுக்கு சென்றடைந்த விபரங்களை குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆண்டு ஆய்வு கடைசி நாளில் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு ஆய்வு பணியாளர்கள் தயாரித்துள்ள ஆய்வின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி ஆய்வின் போது குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது பள்ளியில் அமர்ந்து ஆய்வு கூறுகளை பார்க்க வேண்டும்.
ஆசிரியர்களுடன் உரையாடி கற்பித்தல், கற்றல் போன்றவைகள் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கு சென்று வி்ட்டதா என பார்க்க வேண்டும்.
மேலும் பள்ளியில் வகுப்பறைகள், கட்டுமான வசதிகள், கழிப்பறைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்றும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications